ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கு அமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகளுக்கான கடிதங்களை, தான் உட்பட ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக, கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.