புதிய தேசத்தை உருவாக்குவதிலிருக்கு தடைகளை
விலக்கி நடை போட நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தில் கணிசமான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஹரின் பெர்னான்டோ அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த அதேவேளை, வழமைக்கு மாறாக ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் விட்டுச் சென்ற பதாதைகளைப் பொறுக்கி அகற்றும் பணியிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ ஈடுபட்டிருந்தமை கவனிக்கத்தக்க விடயமாக இருந்தது.