அன்டிஜன் பரிசோதனையில் 61 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தை விட்டு வௌியேறும் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இதுவரையில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஊடாக இன்று காலை வரையில் சுமார் 10,000 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஜனவரி மாதம் வரையில் மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்கபளுக்கு 11 இடங்களில் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.