அப்போலோ மருத்துவர்கள் கண்காணிப்பில் கருணாநிதி… ஜெயாவிற்கு நேர்ந்த கதியினை நினைத்து லண்டன் மருத்துவர்களை வரவழைக்க முடிவு…

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டனில் இருந்து மருத்துவர்களை அழைத்துவர ஸ்டாலினும் அழகிரியும் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது உடல்நிலை நன்றாக இருப்பதுடன், தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார்.

நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் படி…

“அவர் உடல்நிலை இயல்பு நிலையை அடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர் விரைவில் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு தற்போது தனி மருத்துவர் கோபால், சிறப்பு மருத்துவர் எச்.வி ஹண்டே, காவேரி மருத்துவர்கள் 8 ஆகியோர் சிகிச்சை அளிக்கிறார்கள்.

இதனால் அவரின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. அதேபோல் அப்போலோ மருத்துவர்களும் அவரை வந்து அடிக்கடி கண்காணித்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதிக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டனில் இருந்து மருத்துவர்களை வரவழைக்க ஸ்டாலினும் அழகிரியும் முடிவெடுத்துள்ளனர்.

அழகிரி தனது லண்டன் நண்பர் உதவியுடன் இதற்காக மருத்துவர்களை அழைத்து வர முடிவு செய்து இருக்கிறார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.