அமரகீர்த்தி படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொறல்ல கொலை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.