மறைந்த இலங்கையின் பிரபல பாடகர் பண்டித் டப்ளியூ.டீ.அமரதேவவின் பெயரில் கலை நிலையம் ஒன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஏனைய கலைஞர்கள் இதற்கு உகந்த வழிகாட்டலை வழங்குமாறும் அவர் கூறியுள்ளார்.
அமரர் அமரதேவவின் இறுதிக் கிரியைகள் இன்று(05) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றன.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.