அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது H-1B விசாவில் பணியாற்றும் வெளிநாட்டினரின் வாழ்க்கைத் துணையும் அங்கு வேலை தேடிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி சுமார் 2 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது.
எனவே பெரும்பாலான வெளிநாட்டினர் கனடாவுக்கு இடம்பெயர திட்டமிட்டிருப்பதாக மேலும் கூறப்படுகிறது.