ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்வதற்கு எதிர்பார்த்திருந்தும் தனக்கு வீசா வழங்கப்படவில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி செல்லும் ஐ.நா. கூட்டத் தொடருக்கு அழைத்துச் செல்பவர்களது பெயர் பட்டியலில் எனது பெயரும் காணப்பட்டது. இருப்பினும், எனக்கு வீசா வழங்கப்படவில்லை.
குறித்த இந்தப் பட்டியலில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன, பிரதி அமைச்சர்கள் இருவர் உட்பட என்னுடைய பெயரும் காணப்பட்டது எனவும் அமைச்சர் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
(riz_mira)