அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் இணைந்து பணியாற்றத் தயார்- ஜனாதிபதி…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நேற்று(20) பதவியேற்ற டொனால்ட் ட்ரம்புக்கு தனது டுவிட்டர் வலைதளத்தினூடாக ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.