அமைச்சரவைக் குழு நியமனம் நாளை(18) – ஸ்ரீ.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்முகப் பரீட்சை..!

புதிய அமைச்சரவை குழுவுக்கான நியமனம் நாளை(18) இடம்பெறவுள்ளதாக அலறி மாளிகையில் இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தார்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள டபல் கேம் ஆனவர்களை நாம் புதிய அரசில் இணைக்க மாட்டோம்” என தெரிவித்திருந்த அவர், ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை எடுப்போமேயானால் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஏகமன தீர்மானத்துடன் நேர்முகப் பரீட்சை வைத்தே எடுப்போம் என தெரிவித்திருந்தார்.