அமைச்சரவைக் கூட்டத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு தடை..

அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரும் போது அமைச்சர்கள் கையடக்கத் தொலைபேசி எடுத்து வருவதை தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் பிரேரணைகள் குறித்து அமைச்சர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று(20) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளித்த அமைச்சர்களிடம் ஜனாதிபதி குறித்த இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

(rizmira)