அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 2, இனி 4 ஆகிறது…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப, பாராளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், நான்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.