அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(21) களுத்தறை இராணுவ ஒன்றிணைந்த அமைப்பினால், கொழும்பில் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தனக்கும், தனது குடும்பத்துக்கும் எதிராக அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு எதிரான மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(rizmira)