ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராக இருந்த இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன குறித்த பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி, குறித்த பதவியில் இருந்து விலகுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மே மாதத்திற்கு முன்னர் இடம்பெற உள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஏலவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma