அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்கவிடம் ரூ.500 மில்லியன் மான நஷ்டம் கேட்டு, மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணியினூடாக அறிவித்தல் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க முன்வைத்திருந்த போலியான சொத்து விபரம் தன்னுடைய கௌரவத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தே மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு நஷ்ட ஈட்டைக் கோரியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.