அமைச்சர் கந்தையாவுக்கு யங்கரவாத புலனாய்வு பிரிவு அழைப்பு – அமைச்சர் மறுப்பு…

வடமாகாண கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு எதிர்வரும் மாதம் 05ம் திகதி பொலிஸ் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தில் உயிர்நீத்த உறவுகளை அஞ்சலிப்பதற்காக அனைத்துப் பாடசாலைகளிலும் தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்கவிடுமாறு பணித்திருந்தமை குறித்து வாக்குமூலம் வழங்கவே வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரனுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கடிதத்தில் தனது பெயரில் சர்ச்சை நிலவுவதாகவும், குறித்த தினத்தில் தனக்கு சமூகமளிக்க முடியாதுள்ளதாகவும் வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.