அமைச்சர் ராஜிதவிற்கு இன்று சத்திரசிகிச்சை

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை இன்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இரண்டு இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோய் அறிகுறிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டமையினால் சாதாரண சத்திரசிகிச்சையாகவே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.