சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் மருத்துவர் சங்கத்திற்கும் இடையில் மீளவும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒளெடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் எவ்வித நியதிகளையும் பின்பற்றாது பணி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்,தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் உத்தியோகபூர்வமாக தமது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவர் சங்கம் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.