கிழக்கு மாகாணத்தின் சிங்கள ஆரம்ப குடிகளை அப்பிரதேசங்களில் மீள் குடியேற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் வழங்க தயாராகவுள்ளதாக மீள் குடியேற்ற பிரதி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அப்பிரதேசங்களில் ஆரம்ப குடிகளாக இருந்த எவரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை மீள் குடியேற்றுவதில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் காணப்பட்டன. இது குறித்து சகோதர மொழி தனியார் ஊடகமொன்று இராஜாங்க அமைச்சரிடம் வினவியபோதெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.