அமைச்சுக்களின் பிரதிநிதிகளை கொண்ட 12 குழு அமைக்க யோசனை

அமைச்சுக்கான ஆலோசனை செயற்குழுவுக்குப் பகரமாக சகல அமைச்சுக்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்கும் விதமாக 12 குழுக்களை அமைக்க பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் விவகாரம், பாராளுமன்ற விவகாரம் மற்றும் வரவுசெலவுத் திட்டத்துடன் தொடர்புடைய விடயங்களைக் கண்காணித்தல் என்பவற்றுக்காக பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் இப்பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரியானி விஜேவர்தன, தற்போதைய பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க, கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட பிரதமர் செயலக சட்டத்தரணி பிம்பா திலக்கரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கும் குழுவினானேயே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது