(FASTGOSSIP | COLOMBO) – அமைச்சுப் பதவியினை துறந்து எச்சந்தர்ப்பத்திலும் அர்ப்பணத்துடன் களமிறங்க தான் தயாராகவே உள்ளதாக அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.
மாவனல்லை கல்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அண்மையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் தனது அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்திருந்த நிலையில், நேற்று(19) மீளவும் அமைச்சர்களாக கபீர் ஹஷீம் மற்றும் ஹலீம் ஆகியோர் தனது பதவிகளை பொறுப்பேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.