அம்பலங்கொட பகுதியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கிப் பலி..

(FASTNEWS | COLOMBO)- அம்பலங்கொட, அகுரல கடலில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மற்றும் கஹவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 66 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.