அம்பேகமுவ, பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை மூன்று பிரிவுகளாக பிரித்து எல்லை நிர்ணயிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது.
அம்பேகமுவ, பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எச்.டி. நந்தராஜினால் குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த மனு எதிர்வரும் 15ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#reshmaa