அயர்லாந்தின் பிரதி பிரதமர் பிரான்சஸ் பிட்ஸ் ஜெரோன் அதனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உடனடி தேர்தல் ஒன்று நடைபெறுவதை தடுபபதற்காகவே தனது பதவியை இராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். பிரதிப்பிரதமரின் இராஜினாமா தொடர்பில் கவலையடைவதாக அயர்லாந்தின் பிரமர் டியோ வரட்கார் தெரிவித்துள்ளார்.
பிரதிப்பிரதமரின் இரகசிய தகவல்களை பகிரங்கப்படுத்திய நபர் ஒருவரால் பல்வேறு அழுத்தங்கள் பிரதிப்பிரதமருக்கு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியான பியானா பேல் பிரதிபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்பிக்கவிருந்த நிலையில் இராஜினாமா இடம்பெற்றுள்ளது.