புதிய அரசியலமைப்பு தொடர்பில் தௌிவுபடுத்துமாறு கோரி, அரசாங்கத்திற்கு வினாப்பட்டியல் ஒன்றை அனுப்பி வைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று(23) இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விஷேட கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசாங்கத்திடம் இருந்து தௌிவான மற்றும் சரியான பதில்களை எதிர்பார்ப்பதாக, அச் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.