பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை உள்ளிட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயும் நோக்கில் பொருளாதாரக் குழு, மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரையும் அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.