அரசியலமைப்புச் சபை இன்று (25) பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சிலரை நியமிப்பதற்கான பரிந்துரைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த சபை கூடவுள்ளது.
மேலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.