இன்று(21) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது அரசியலமைப்புச் சபை சம்பந்தமான விவாதம் இடம்பெற உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் உதய கம்மன்பில இந்த பாராளுமன்ற விவாதத்தைக் கோரியிருந்தார்.
அதன்படி இன்று ஒத்திவைப்பு பிரேரணையாக இந்த யோசனையை உதய கம்மன்பில பாராளுமன்றத்திற்கு சமர்பிக்க உள்ளார்.