அரசியலமைப்பு பேரவையில் முஸ்லிம் பிரதிநிதி: முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்

அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு முஸ்லிம் சிவில் சமூ­கத்தைச் சேர்ந்த பிரதி நிதி­யொ­ருவர் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டு­மென 125 முஸ்லிம் சமூக அமைப்­பு­களைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் கையொப்­ப­மிட்டு ஜனா­தி­ப­திக்கு நேற்று அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

“கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூகம் பல அச்­சு­றுத்­தல்­களை எதிர் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. என்­றாலும் 2015 ஜன­வ­ரியில் ஆட்சி மாற்ற மேற்­பட்டு 19 ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் நாட்டு மக்கள் அனை­வரும் நீதி­யையும் ஜன­நா­ய­கத்­தி­னையும் அனு­ப­விக்க முடியுமா­க­வுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் முஸ்லிம் சமூக பிர­தி­நி­தியின் பங்கு அவ­சி­மா­க­வுள்­ளது. எனவே இதுபற்றி கவனம் செலுத்தி முஸ்லிம் பிரதிநிதி யொருவரை நியமிக்கும்படி வேண்டுகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.