உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பணிகளுக்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துக்கள், யோசனைகள் ஆகியவற்றை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் கட்சி சார்பாக விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
இக்குறித்த குழுவில் ஶ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, பைசர் முஸ்தபா, எஸ்.பீ.திஸாநாயக்க, ஏ.எம்.ஏ.ஹிஸ்புல்லா, பவித்ரா வன்னியாராச்சி, கெஹெலிய ரம்புக்வெல்ல, ஏ.எச்.எம். பௌசி, பந்துல குணவர்தன ஆகியோர் அடங்குகின்றனர்.