அரசியல்வாதிகளுக்கும் தஞ்சம் வழங்கும் பிரதான விபச்சார விடுதி சுற்றிவளைப்பு..

இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிஸ்சை வித்தியால மாவத்தையில் இரண்டு மாடி கட்டடத்தில் நடத்தி செல்லப்பட்ட குறித்த இந்த விபச்சார விடுதிக்கு பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் செல்வதாக தெரிய வந்துள்ளது.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட இந்த விபச்சார விடுதியின் முகாமையாளர், ஊழியர்கள் மற்றும் 12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 – 39 வயதுடைய இந்த பெண்கள் அனுராதபுரம், பொலன்னறுவை, கித்துல்கல, தங்கல்லை, மொரட்டுவ, கந்தான ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

1300/= செலுத்தி சென்றதன் பின்னர் 6000/= வரையில் செலுத்தி பெண்களை பெற்று கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு புலனாய்வு பிரிவு ஊடாக கிடைத்த தகவலுக்கமைய 1300/= பணம் செலுத்தி நபர் ஒருவரை அனுப்பி வைத்துள்ள நிலையில் குறித்த இந்த விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)