கொழும்பு வலய பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு பிரதேச அரசியல்வாதிகளை அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இடம்பெறும் திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டும் வைபவங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு பிரதேசத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் ஜீ.என். சில்வா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதேவேளை, குறித்த நிகழ்வுகளுக்கு வருகைத் தரும் அரசியல்வாதிகளுக்கு உரிய மரியாதை வழங்குமாறும் குறித்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.