எதிர்வரும் வியாழக்கிழமை அரசியல் அமைப்பு சபையானது ஒன்று கூடவுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள, நிலையில் குறித்த ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் இதன் போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்படி புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையிலும் தற்போதுள்ள உறுப்பினர்களாலேயே ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.