அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மற்றும் பிரதமரே பொறுப்புக் கூற வேண்டும்…

மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாது மந்தகதியில் செயற்படும் ஆட்சியாளர்களுக்கே புனர்வாழ்வு  அவசியம் என்று, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு  இன்று(27) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு, கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அனுராதபுர சிறைச்சாலையில், உண்ணாவிரதமிருக்கும் பத்து அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.