அரசியல் சாசனத்தில் உள்ள உரிமைகளை எனது நிர்வாகம் பாதுகாக்கும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மகிழ்ச்சிகரமானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் இந்த தீபாவளி பண்டிகை அமையட்டும் என இந்து மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில்,

“அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, நமது நாட்டின் மிக முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்துவதாகும்.

நமது அரசியல் சாசனத்தில் கூறியுள்ள உரிமைகளை எனது நிர்வாகம் பாதுகாக்கும். இதன் மூலம் எல்லா மத நம்பிக்கை கொண்ட மக்களும் தங்கள் நம்பிக்கையின்படியும், மனசாட்சியின்படியும் வழிபட முடியும்.

தீபங்களின் பண்டிகையான தீபாவளி கொண்டாடுகிறவர்களுக்கு, அந்த கொண்டாட்டம் மகிழ்ச்சிகரமானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் அமைய நானும், மனைவி மெலனியாவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்”