அரசிலிருந்து விலகுவதாக பாலித தேவப்பெரும சிவப்புச் சமிஞ்சை

மீகாதென்ன பாடசாலையில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்கள் சிலர் சேர்த்துக் கொள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவும், அவருடன் இணைந்த குழுவினரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டமானது இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில் இன்று சாதகமான பதில் கிடைக்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து பதவி விலகப் போவதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பாலிந்த நுவர, வலலாவிட்ட, நியாகம, மதுராவெல பிரதேச சபைகளின் முன்னாள் எதிர்கட்சி உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இணைப்புச் செய்தி 

பாலித தெவரப்பெரும மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்.. (PHOTOS)