(FASTNEWS| COLOMBO) – அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இறுதி நிலைப்பாடு ஒன்றினை எட்டுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று(09) இரவு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவின் கொழும்பில் உள்ள வீட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நம்பிக்கையில்லா யோசனைக்கு கட்சியானது ஆதரவாக வாக்களிக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னர் தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.