அரச அலுவலகங்களில் நேர மாற்றம் எதிர்வரும் 18ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகங்களின் பனி நேரமே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
காலை 7.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரையில் பணி நேரம் அமுல்படுத்தப்பட உள்ளது. பரீட்சார்த்த அடிப்படையில் குறித்த இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)