அரச கட்டிடத்திட்டங்களுக்கு கடல் மண்ணை பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை.

அரச கட்டிடத்திட்டங்கள் அமைப்பது தொடர்பில் கடல் மணலை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம், திருக்கோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காகவே இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.