அரச சேவையாளர்களுக்கு இம்மாதம் 30ஆம் திகதி வரை பிரச்சினைகள் இன்றி சம்பளம் வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (06) ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இதேபோன்று உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கும் மக்களுக்கு ஏனைய நிவாரணங்களை வழங்குவதற்கும் முடியும் என்றும் கூறினார்.
அரசியல் குழப்ப நிலை காரணமாக அரச சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது முறையற்றதாகும் என்றும் தெரிவித்தார்.