அரச நில அளவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…

இன்று(14) முதல் 3 நாட்களுக்கு அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.

நாட்டின் நில அளவை பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.