அரச மருத்துவ அதிகாரிகள் அரசுக்கு அவதான நிலையினை சுட்டிக்காட்டி எச்சரிக்கை..

தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்கு முறை ஆணைய சட்டத்தை அமுலாக்குவதன் மூலம் போலியான மருத்துவர்கள் பதிவு செய்யப்படும் அவதானம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இதனை குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை ,குறித்த இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் இருக்கு அரச மருத்துவர்கள் அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

####