அரச வெசாக் வைபவம் குருநாகல் மாவட்டத்தில்…

2562ம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கான அரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையினை கேந்திரமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி முதல் மே மாதம் 02ம் திகதி வரையான ஒரு வார காலத்தினை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், அதனுடன் தொடர்புபட்ட மேலும் பல நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்கும் உத்தேசித்துள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.