நாடளாவிய ரீதியில் நாளை(07) முன்னெடுக்கப்படவுள்ள அரச வைத்தியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்து தடையுத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு இருதய நோயாளி ஒருவர் இன்று(06) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அதனை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுதீர நிஷ்ஷங்க தடையுத்தரவினை பிறப்பிக்காது, அரச வைத்திய சங்கத்தினை மே 04ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவித்து இடைக்கால தடையுத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.