சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(22) முன்னெடுக்கும் அரச வைத்தியர் சங்கத்தின் வேலை நிறுத்தத்தில் இம்முறை புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்காது என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனியார் பேரூந்து சங்கம் சுயாதீனமாக செயல்படும் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.