அரச வைத்தியர்கள் – ஆசிரியர்கள் நாளை(21) நாடுதழுவிய போராட்டத்தில்..

அரச வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மீளவும் நாடு தழுவிய ரீதியாக நாளை(21) காலை 08.00 மணி முதல், 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

மேலும் இப்போராட்டத்தில் சில சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்த பிரச்சினையில் அரசாங்கம் மௌனிப்பதும் அதற்கான எவ்வித தீர்வினை பெற்றுத்தர பின்வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.