(FASTNEWS|COLOMBO ) – பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(22) காலை 08 மணி முதல் நாளை(23) காலை 8 மணி வரையில் 24 மணித்தியால ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு இடம்பெற மாட்டாது என வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.