கைது செய்யப்பட்ட சிங்கள ஜாதிக்க பலமுலுவவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் அரம்பேபொல ரத்னசார தேரர் நிட்டம்புவ பொலிஸாரால் நேற்று(19) கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருப்பதாக கூறியுள்ள பொலிஸார் அது தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
(rizmira)