அரிசியின் விலையை 5.00 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சகோதரருமான டட்லி சிறிசேன தெரிவித்தார்.
அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் திகதி வரையில் என்னுடைய இந்த உறுதி மொழி செல்லுபடியாகும். இதன்பிறகு அரிசி 95.00 ரூபாவுக்குட்பட்ட விலையில் கொள்வனவு செய்ய முடியுமாக இருக்கும் எனவும் அவர் நேற்று(12) ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.