எதிர்வரும் 3 மாதங்களில் அரிசி விலை அதிகரிக்கப்பட மாட்டாது என, அரிசி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேமக பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“..எவ்வித தடங்களும் இல்லாமல், அரிசி வழங்குவதற்கு தேவையான தொகை போதுமானளவு உள்ளது. தற்போது வரையில், அரிசி விலை அதிகரிக்கப்படவில்லை. எதிர்வரும் 3 மாதங்கள் வரை, தற்போதைய அரிசியின் மொத்த விலையை பராமரிக்க கூடியாத இருக்கும். அதில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.
மேலும்,வாழ்க்கை செலவு தொடர்பான செயற்குழுவுடன் நேற்று முன்தினம்(11) கலந்துரையாடலொன்றை மேற்கொண்டோம்.
இதன்போது, தற்போதுள்ள அரிசி 1Kg இற்கு கிடைக்கும் 5 ரூபாயை சுங்க வரி திருத்தத்துக்கு அல்லாமல் வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் அறிவித்துள்ளோம்..” எனவும் தெரிவித்திருந்தார்.